Don't Miss!
- Finance ரம்ஜானும், பிரியாணியும்.. பிரிக்க முடியாத காம்போ..!!
- News விளவங்கோடு இடைத்தேர்தல்.. விட்டதை பிடிக்குமா காங்கிரஸ்? யாருக்கு வெற்றி வாய்ப்பு.. பரபர சர்வே
- Sports 49 பந்தில் சுனில் நரைன் சதம்.. 2வது பந்திலேயே கேட்ச்சை கோட்டை விட்ட பராக்..பாய்ந்து பிடித்த ஆவேஷ்
- Lifestyle இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தில் ராஜா ராணி 2 டீம்...அட காரணம் இதுதானா ?
சென்னை : விஜய் டிவி.,யில் 2017 ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2 சீரியல். ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்கிறார். குழந்தை பிறந்த பிறகு அவர் கமிட்டான சீரியல் இது.
இந்தியில் ஒளிபரப்பான Diya Aur Baati humm என்ற சீரியல், தமிழில் அப்படியே டப் செய்யப்பட்டு, என் கணவன் என் தோழன் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த சீரியலின் கதை தான் தற்போது ராஜா ராணி 2 என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி சீரியல்களில் அதிக ரேட்டிங்கை பெற்ற சீரியல்களில் ராஜா ராணி 2 இரண்டாம் இடத்தில் உள்ளது. குழப்பங்கள், பிரச்சனைகள் என விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது ராஜா ராணி 2 சீரியல்.
பெல்லி ஆர்ட்… கர்ப்பகாலத்துல இப்படி பண்ணலாமா… விமர்சனங்களில் சிக்கிய விஜய் டிவி நடிகை !
இந்நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகர் ஒன்றாக இணைந்து, குடுக்கு பொட்டிய குப்பாயம் என்ற மலையாள பாடலை பாடி, குத்தாட்டம் போட்ட வீடியோ நேற்று வெளியானது. வழக்கமாக ஆலியா மானசா தான் செட்டில் இருந்து ரீல் வீடியோக்களை வெளியிடுவார். ஆனால் இப்போது நடிகர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடி உள்ளனர்.
காரணம் என்னவென்று விசாரித்தால், ராஜா ராணி 2 சீரியல் 200 வது எபிசோட்டை எட்டி விட்டதாம். அதை தான் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.