Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது ஆனந்தம் விளையாடும் வீடு... ”ஊருடன் கூடி வாழ” சொந்த ஊரில் வீடு கட்டும் ராஜகுமாரன் – தேவயானி!
சேலம்: உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வருவதாக நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரில் சினிமா நடிகை தேவயானியின் கணவரும், சினிமா இயக்குனருமான ராஜகுமாரனின் உறவினர் வீடு உள்ளது.
அங்கு வந்த ராஜகுமாரன், "நீ வருவாய் என..., விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட நான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதையை தந்துள்ளேன்.
ராதே பிலிம்ஸ், இனியா மியூசிக்கில் நான் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள "திருமதி தமிழ்" படத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பாடலாக உருவான "திருக்குறள் இடையழகி" பாடலும், "தமிழ் தமிழ்" பாடலும் இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் முதன்மை பாடலாக போடப்பட்டு மாணவ, மாணவிகள் நடனம் ஆடி வருகிறார்கள்.
"விண்ணுக்கும் மண்ணுக்கும்" படத்தில் வரும் காதல் கதையை போல நானும், நடிகை தேவயானியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது எங்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.
நான் பல்வேறு மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்று வந்தாலும் சொந்த ஊர், மண்ணில் வந்து தங்கி இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி.
அதற்காக அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் என் சொந்த நிலத்தில் உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக புதிதாக வீடு கட்டியுள்ளேன். இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.