Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பாகுபலியின் இதயம் ராஜமௌலி என்றால்... பாகுபலியின் ரத்தம் ரசிகர்கள் தான் - பிரபாஸ்
ஹைதராபாத்: படங்களின் வெற்றிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நடிகரும் காரணமாக முடியாது.ஒட்டுமொத்த குழுவினரின் உழைப்பும், படத்தின் கதையுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நடிகர் பிரபாஸ் கூறியிருக்கிறார்.
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி 2 மற்றும் தனது திரைவாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் கூறும்போது "படத்தின் வெற்றிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நடிகரும் காரணமாக முடியாது, படத்தின் இயக்குநர் தொடங்கி ஒட்டுமொத்த குழுவினருக்கும் அந்த வெற்றியில் பங்குண்டு.
பாகுபலி படத்தை எடுத்துக் கொண்டால் பாகுபலியின் மூளை மற்றும் இதயம் என்று ராஜமௌலியை குறிப்பிடலாம். தயாரிப்பாளர்கள் பாகுபலி எழுந்து நிற்க எலும்பாக மாறினர்.
ரசிகர்கள் பாகுபலியின் ரத்தமாக மாறி படத்தை ஓட வைத்தனர் இது போன்று ஒரு கூட்டு முயற்சியே படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் திரைக்கு வருவதே பெரும்பாடாக இருக்கிறது, இந்த மாதிரியான சூழலில் படக்குழுவினரின் கூட்டு முயற்சியே படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது, இந்தப் படத்திற்காக மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை கட்டுக்கோப்பாக மாற்றவிருக்கிறார் நாயகன் பிரபாஸ்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 600 கோடியை வசூலித்த இந்தத் திரைப்படம் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.