ரஜினி உத்தரவிட்டா போதும்... - ராஜமவுலி

By Shankar

Rajamouli
எந்த நடிகரும் இவர் பேச்சுக்கு கட்டுப்படுவார் எனும் அளவுக்கு இன்று ஏக மவுசுடன் திகழ்கிறார் தெலுங்கு இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி.

ஆனால் அந்த ராஜமவுலியையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரே நடிகர்... வேறு யார்.. ரஜினி தான்.

நான் ஈ பார்த்துவிட்டு, ரஜினி பாராட்டியதை பெரிய விருதுக்கு சமமாகக் கருதுகிறார் ராஜமவுலி.

அவர் சொல்கிறார், "இந்தப் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளில் முக்கியமானது, ரஜினி சாருடையதுதான். அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. எனக்கு பெரிய விருது கிடைச்ச மாதிரி உணர்கிறேன்," என்றவரிடம்,

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்சவர் யார்? யாரை இயக்க வேண்டும் என்பது உங்கள் கனவு? என்று கேட்டோம்.

ராஜமவுலி கூறுகையில், "இரண்டு கேள்விக்குமே ஒரே பதில்தான். எனக்குப் பிடிச்ச ஒரே ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரை இயக்க வேண்டும் என்பது என் கனவு.

ரஜினியை சந்திக்கும் அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது. என் கனவு நாயகனே, நான் இயக்கிய படத்தை என்னுடன் பார்த்துப் பாராட்டியதை விட, எனக்கு என்ன பெருமை வேண்டும்?

என்னுடைய 'மகதீரா' பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டு பாராட்டினார்.

இப்ப 'நான் ஈ' படத்தை என்னோடதான் பார்த்தார். 'நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க'னு உற்சாகமா பாராட்டினார்.

நான் பார்த்துப் பார்த்து சிலிர்க்கும் அற்புதமான கலைஞர் ரஜினி சார். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை என்பதுதான் உண்மை,'' என்றார்.

அப்ப நீங்கதான் ரஜினியின் அடுத்த சாய்ஸா...?

அதை அவர்தான் சொல்ல வேண்டும். சொல்லக்கூட வேணாம்.. உத்தரவிட்டாலே போதும்... நான் ரெடி!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X