Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பிரபல இயக்குனர் ராஜமவுலி.. பிளாஸ்மா தானம் செய்ய வெயிட்டிங்!
ஐதராபாத்: கொரோனாவில் இருந்து மீண்டு விட்ட இயக்குனர் ராஜமவுலி, பிளாஸ்மா தானம் செய்ய காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இப்போது, 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.
மஞ்சள் காமாலை நோய்.. கல்லீரல் பாதிப்பு.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!
நடிகை ஆலியா பட்
இதில் பிரபல தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கின்றனர். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், சமுத்திரக்கனி, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படப்பிடிப்புகள்
கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இதன் தீவிரம் குறையவில்லை.
ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் சினிமா, அரசியல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நடிகர் விஷாலும் அவர் தந்தையும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டனர்.
கொரோனா அறிகுறி
இந்நிலையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். லேசான கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய உள்ளோம்' என்று ட்விட்டரில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கூறி இருந்தார்.
பிளாஸ்மா தானம்
இந்நிலையில், தனிமை முடிந்து அவர் குணமாகியுள்ளார். இதுபற்றி, 'இரண்டு வாரத் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டேன். எந்த அறிகுறிகளும் இல்லை. எங்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடீஸ் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க, மருத்துவர் 3 வாரங்கள் காத்திருக்குமாறு கூறியுள்ளார்' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.