Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்த படம் என்ன? வாய் திறந்தார் ராஜமௌலி!
சென்னை: தனது அடுத்த படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 2018-ம் ஆண்டு சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தை இயக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மெகா வெற்றிப் பெற்ற பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பின் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவென்று பலவிதமான யூகங்கள் வெளியாகின.
இப்போதுதான் தனது அடுத்த படங்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.
முதலில் சமூக அக்கறையுடன் கூறிய படமொன்றை முதலில் இயக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதில் நடிப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர் தந்தை எழுதியுள்ள முதல்வன் 2 கதையா என்றும் தெரிவிக்கவில்லை. இப்படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கா, தமிழ் - தெலுங்கா தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து 2019-ல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதனை கே.எல்.நாராயணா தயாரிப்பார் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
இந்தப் படங்களில் தேவைப்பட்டால் மட்டுமே பிரமாண்டம் காட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.