Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருப்பதியில் “மங்களகரமாக” வெளியாகும் பாகுபலி பாடல்கள்!
ஹைதராபாத்: தெனாலி படத்தில் நடிகர் கமல் சொல்வாரே பயம் பயம் நின்றாலும் பயம் அமர்ந்தாலும் பயம் எங்கு திரும்பினாலும் பயம் என்று, அதைப்போன்று தற்போது இந்திய சினிமா முழுதும் பாகுபலி, பாகுபலி என்றே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது.
யாராவது தும்மினால் கூட நேற்று பாகுபலி படப்பிடிப்பில் இவர் தும்மினார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடக் கூடிய அளவிற்கு நாளுக்கு நாள் பாகுபலியின் மீதுள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பாகுபலியின் சமீப செய்தி படத்தின் பாடல்களை திருப்பதியில் மங்களகரமாக வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர் படக் குழுவினர். கடந்த மே மாதம் வெளியிட வேண்டிய பாடல்கள் இன்னும் வெளியாகாமல் தள்ளிக் கொண்டே செல்கிறது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக படத்தின் பாடல் வெளியீடு திருப்பதியில் நடைபெறும் என்று படத்தின் தயாரிப்புத் தரப்பில் இருந்து செய்தி வந்திருக்கிறது.
வரும் 13 ம் தேதி ஏழுமலையானுக்கு உகந்த தினமான சனிக் கிழமையன்று பாடல்களை திருப்பதியில் வெளியிடப் போகிறாராம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.