Don't Miss!
- News ரூ.173.85 கோடி பறிமுதல்! இலவச பொருள்களோ 35.78 கோடி! எங்கே போகிறது தமிழ்நாடு?
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குஷி, வாலி போல யாராலும் படம் எடுக்க முடியாது.. எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய தயாரிப்பாளர்!
சென்னை : கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், எஸ் ஜே சூர்யாவை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன், தற்போது கடமையை செய் என்ற படத்தை இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் வரும் ஆகஸ்ட் 12ந் தேதி தேதி ரிலீஸாக உள்ளது.
டல் அடிக்கும் அமீர்கான், அக்ஷய் குமார் படங்களின் புக்கிங்.. பாய்காட் பாலிவுட் தான் காரணமா?
எஸ் ஜே சூர்யா.
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
தலைவரே...தலைவரே
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சிம்புவின் மாநாடு திரைப்படத்தில், தலைவரே...தலைவரே என பேசி ஒட்டுமொத்த அப்ளாசையும் அள்ளினார்
சூர்யா திறமையானவர்
கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன்.கடமையை செய் பணத்தை எதிர்பார்க்காதே என நகைக்சுவையாக தனது பேச்சை தொடங்கினார். இந்த படத்தில் அருமை தம்பி எஸ்.ஜே. சூர்யா ஹீரோ, இப்போது பெரிய அளவில் வில்லனாக மாறிவிட்டார். இயக்கும், நடிகர், இசையமைப்பாளர் என அவருக்கு அனைத்து திறமையும் இருக்கு குஷி, வாலி படத்தை இவரைத்தவிர வேறு யாராலுமே பண்ண முடியாது அப்படி ஒரு திறமையானவர் எஸ்.ஜே. சூர்யா என்றார்.
தப்புதப்பா எழதாதீங்க
கடமையை செய் படத்தின் கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். எஸ்.எஸ்.சூர்யாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கு என்றார். பத்திரிகையாளர்களே, ஊடக நண்பர்களே இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை எழுதுங்கள். தப்புதப்பா எழதாதீங்க சிலர் காசு கொடுத்தாத்தான் நல்ல எழுதுறான். இல்லனா தப்பு தப்பா எழுதுறான் என்றார்.