Rajasekar Pachai - எவரெஸ்ட் நாயகன் ராஜசேகர் பச்சை - அஜித்திடம் வாழ்த்து பெற்றார்

சென்னை: Rajasekar Pachai (ராஜசேகர் பச்சை) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமம் கோவளம். அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர். அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அதற்குரிய பயிற்சிகளைத் தொடங்கி, தொடர்ந்து மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றார்.

Rajasekhar from Tamil Nadu who achieved the record of climbing Mount Everest, personally met and congratulated actor Ajith

ஒரு வருடம் பயிற்சி: இதனையடுத்து ஒரு வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்த அவர் ஆறு மலை உச்சிகளில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் கனவை நோக்கி நடை போட்டார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் மாத கணக்கில் தங்கி உடலையும் மனதையும், குளிருக்கு தயார் செய்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு உறுதியோடு தயாரானார்.

எவரெஸ்ட் சென்ற தமிழர்: அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கிய ராஜசேகர் பச்சை 8,850 மீட்டர் உயரத்தை கடந்த மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். ஒரு மாதத்திற்கும் மேல் கடும் இன்னல்களை கடந்து எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தார்.

Rajasekhar from Tamil Nadu who achieved the record of climbing Mount Everest, personally met and congratulated actor Ajith

இரண்டாவது நபர்: தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார்.

அஜித்தை சந்தித்து வாழ்த்து: இந்நிலையில் ராஜ்சேகர் பச்சை நடிகர் அஜிகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி படு ட்ரெண்டாகியுள்ளது. அஜித்குமார் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான ஷூட்டிங் அடுத்த வாரம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே ஏகே மோட்டோ ரைடு என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தையும் அவர் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X