Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ராஜேஷ் கன்னா உடல் தகனம்: சிதைக்கு தீ மூட்டிய பேரன் ஆரவ்
மும்பையில் உள்ள ஆசீர்வாத் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஷ் கன்னாவின் உடல், காலை 10.15 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வெள்ளை நிற வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு முக்கிய சாலைகளில் திரண்டிருந்த ரசிகர்களுக்க மத்தியில் மெதுவாக ஊர்ந்து சென்றது. மும்பையே திணறும் அளவுக்கு லட்சக்கணக்கில் மக்களும் ரசிகர்களும் இந்த இறுதி ஊர்வலத்துக்கு திரண்டு வந்தனர்.
ராஜேஷ் கன்னா மனைவி டிம்பிள் கபாடியா, மகள்கள் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா, மருமகன்கள் அக்ஷய் குமார், சமீர் சரண் ஆகியோர் அந்த வண்டியில் அமர்ந்து சென்றனர். இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணி அளவில் விலே பார்லேவில் உள்ள மைதானத்தை அடைந்தது. அங்கு அவரது உடலுக்கு ட்விங்கிள்- அக்ஷய் குமாரின் மகன் ஆரவ் தீ மூட்டினார்.