Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
52 வயதில் மீண்டும் தந்தையான பிரபல நடிகரின் அப்பா
மும்பை: பாலிவுட் நடிகர் இஷான் கட்டாரின் தந்தை மீண்டும் தந்தை ஆகியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தாய் நீலிமா ஆசிம் டிவி நடிகர் ராஜேஷ் கட்டாரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் நடிகர் இஷான் கட்டார். நீலிமாவை பிரிந்த ராஜேஷ் நடிகையும், தயாரிப்பாளருமான வந்தனா சஜ்னானியை திருமணம் செய்தார்.
வந்தனாவுக்கும், ராஜேஷுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்து. இந்நிலையில் வந்தனா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 52 வயதில் ராஜேஷ் மீண்டும் தந்தை ஆகியுள்ளார்.
இது குறித்து ராஜேஷ் கூறியதாவது,
வந்தனா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் மூன்றாவது மாதத்தில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். சில மாதங்கள் கழித்து ஒரு குழந்தையின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த குழந்தையை இழந்துவிட்டோம்.
இதையடுத்து மற்றொரு குழந்தையை காப்பாற்ற உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எங்கள் மகன் 3 மாதங்களுக்கு முன்பே உலகத்திற்கு வந்துவிட்டார். வந்தனாவின் அறுவை சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் எங்கள் குழந்தை இரண்டரை மாதங்களாக தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டது.
தாயும், சேயும் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். எங்களின் கிருஷ்ணர் ஜன்மாஷ்டமி அன்று வீட்டிற்கு வந்துள்ளார். எங்கள் மகனை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி. கடவுள் எங்களுக்கு அளித்த பரிசுகளிலேயே இது தான் மிகவும் அழகான பரிசு.
52 வயதில் தந்தையானது சவாலானது தான். ஆனால் 50 வயதில் எத்தனையோ பேர் தந்தையாகியுள்ளனர். நான் முதல் முறையாக தந்தை ஆன போது வாலிபராக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார் ராஜேஷ்.