Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்
சென்னை: ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமாரின் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.
கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகினர் கமலுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கமலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.
மேலும் கமல் ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு வெளியே கூடி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ரசிகர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமலுக்கு ஆதரவாகவும், விஸ்வரூபத்தை வெளியிடக் கோரியும் பேனர்கள் வைத்துள்ளனர். கமலுக்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.