twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமாரின் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

    கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகினர் கமலுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கமலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

    மேலும் கமல் ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு வெளியே கூடி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ரசிகர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமலுக்கு ஆதரவாகவும், விஸ்வரூபத்தை வெளியிடக் கோரியும் பேனர்கள் வைத்துள்ளனர். கமலுக்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    English summary
    Rajinikanth and Ajith's fans have kept banners in various districts including Madurai, Theni in support of Kamal Hassan who is fighting hard to relase Vishwaroopam in Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X