Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி பற்றிய வதந்தியால் ரசிகர் தற்கொலை!
உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றங்களையும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களையும் கொண்டவர் ரஜினி.
தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளிலெல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. ஜப்பான், கொரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களிலும் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். அவரைப் பற்றி மாற்றி மாற்றி வரும் செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி குறித்த வதந்தியால் கலக்கமடைந்த ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (29). அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். ரஜினி உடல்நிலை பற்றி வந்த வதந்தியால் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், நண்பர் ராஜேசுக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய வெங்கடேசன், “தலைவர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே, சாகப்போகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், "கவலைப்படாதே, தலைவர் ரஜினி உடல் நலம் தேறி வந்துவிடுவார்" என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போனுக்கு நண்பர் பேசியபோது செயல்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!