Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா!
பயபுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலநமச்சிவாயன். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். அவர் ராமநாதபுர மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். துவக்க விழாவுக்கு நடிகை மோனிகா வந்திருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய பாலநமச்சிவாயன் கூறுகையில்,
நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். ரஜினிக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்பேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். என் முன்னேற்றத்திற்கு எனது நண்பர்கள் தான் காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து பேசிய மோனிகா, கவலைப் படாதீர்கள், நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள். நானும் ரஜினிகாந்த் ரசிகை தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். முதல் ஆளாக நான் 5 மனை வாங்குகிறேன் என்றார்.
பரவாயில்லையே, ஆறுதல் தந்ததோடு நிற்காமல் அஞ்சு மனையையும் வாங்கிப் போட்டாரே.. இவர்தான் உண்மையான விசுவாசி!