சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் அதிமுக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் நெல்லை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பானுசேகர், நிர்வாகிகள் குணசேகர பாண்டியன், சூர்யா கணேசன், சங்கரன்கோவில் குணா, வீரபுத்திரன், கண்ணதாசன், மேலநீலிதநல்லூர் ஆப்பிள் தங்கமணி, மாரிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக வேட்பாளரான முத்துசெல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்போவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முத்துசெல்விக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











