ரஜினி பிறந்தநாள்: செல்போனை 68 நிமிடம் சுவிட்ச் ஆஃப் செய்த ரசிகர்கள்
Recommended Video

பெங்களூர்: ரஜினியின் பிறந்தநாள் அன்று பெங்களூரில் உள்ள ரசிகர்கள் அவருக்காக வித்தியாசமான விஷயத்தை செய்துள்ளனர்.
ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று அமர்க்களமாக கொண்டாடினார்கள். பெங்களூரில் உள்ள கர்நாடக ரஜினி ரசிகர் மன்றம் ரஜினியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளது.

2.0 படத்தின் மெசேஜை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த கொண்டாட்டம் அமைந்தது. அதாவது 2.0 படத்தில் செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் பறவைகள் பாதிக்கப்படுவது போன்று காண்பித்திருந்தார்கள்.
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று மதியம் 12.12 மணி முதல் 1.20 மணி வரை சுமார் 600 ரசிகர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்தனர்.
தலைவரின் பிறந்தநாள் அன்று 2.0 பட மெசேஜை மக்களிடையே கொண்டு செல்லவே இப்படி ஒரு கொண்டாட்டம். தினமும் சிறிது நேரமாவது செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று ரசிகர் மன்ற தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.
மேலும் அரசு பள்ளி மைதானத்தில் 68 மரக்கன்றுகள் நடப்பட்டது. ரத்த தான முகாம் நடத்தப்பட்டதுடன், ரசிகர்கள் கண் தானமும் செய்தனர்.


Click it and Unblock the Notifications











