Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்!
Recommended Video
திண்டுக்கல்: தர்பார் படம் திரையிடப்படாததால் திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் திரையரங்கம் முன்பு இருந்த பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தர்பார் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
தமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. படம் ரிலீஸான தியேட்டர்களில் பட்டாசு, பாலபிஷேகம் என நெட்டிசன்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
பாவம்.. அந்த நம்பர் நடிகைக்கு இந்த படத்துலையும் டம்மி ரோல் தானாம்.. அப்செட்டான ரசிகர்கள்!
பொங்கல் வைத்த பெண்கள்
பாளையங்கோட்டையில் திரையரங்கு வாசலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் வெற்றியடைய வேண்டி பொங்கலிட்ட அவர்கள், பட்டாசுகள் வெடித்தும், ஆடி, பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரஜினி ரசிகர்கள் ரகளை
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் தர்பார் படம் வெளியிடப்படவில்லை என தெரிகிறது.
பேனர்கள் கிழிப்பு
இதனால் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் கடுப்பாகினர். இதனை தொடர்ந்து திரையரங்கிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.
பெரும் பரபரப்பு
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை அப்புறப்படுத்தினர். ரஜினி ரசிகர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.