Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்போ அது உறுதியா.. தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்.. டச்சிங் கொடுத்த ரஜினி!
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தனது ரசிகர்களால் கட்டப்பட்ட 10 வீடுகளுக்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார்.
கடந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வீடுகளை கட்டிகொடுத்துள்ளனர்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!
|
சாவி கொடுத்த ரஜினி
கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்டப் பகுதிகளில் வீடுகளை கட்டியுள்ளனர். வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வீடுகளை பெறும் 10 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் அவரது கையால் சாவியை பெற்றுக்கொண்டனர்.
மக்கள் பணியில் கவனம்
18.5 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் பணியில் கவனம்
18.5 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நில வேம்பு
ஏற்கனவே சென்னை உட்பட பல பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். சென்னை தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தபோது லாரிகளில் குடிநீர் வழங்கி உதவி புரிந்தனர்.
ரஜினி ரசிகர்கள்
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் மக்கள் பணிகளை தீயாய் கவனித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
|
ஒரே தலைவன்
மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவன் ரஜினி தான் என்று டிவிட்டி வரும் ரஜினி ரசிகர்கள், #மக்கள்_நலனில்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்கின்றனர்.