Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி பூரண நலம்... 2.ஓ பணிகளில் பிஸி... அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார்- குடும்பத்தினர் விளக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருப்பதாகவும், 2.ஓ பணிகளில் பிஸியாக உள்ள அவர் அடுத்த வாரம் சென்னை திரும்புவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து திடீரென இன்று காலையிலிருந்து வதந்தி பரவி வந்தது. இலங்கையைச் சேர்ந்த ஒரு இணையதளம் இந்த வதந்தியைக் கிளப்பியிருந்தது.
இது கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ரஜினி ஒரு மிகப் பெரிய பிரபலம். அவரைப் பற்றிய எந்த செய்தியையும் மறைக்க முடியாது என்ற உண்மையைக் கூட யாரும் உணரவில்லை. மளமளவென இதுகுறித்து பரபரப்புச் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். செய்திச் சேனல்களும் இதையே செய்தன.
இந்த நிலையில், ரஜினி உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் விளக்கம் வெளியிட்டுள்ளனர்.
அதில், ரஜினிகாந்த் பூரண நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். இப்போது அமரிக்காவில் 2.ஓ பட வேலைகளில் உள்ள ரஜினி, அடுத்த வாரம் சென்னை திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்அ.
மேலும் ரஜினி மன்றங்களின் பொறுப்பாளரும் ராகவேந்திரா மண்டப நிர்வாகியுமான சுதாகரும் தனது பேஸ்புக் பக்கத்தில் ரஜினி நலமுடன் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.