Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
என் குடிகார தம்பி ரஜினிகாந்த்: ஜெயபிரதா
சென்னை: கே. பாலசந்தர் எழுதி இயக்கிய அந்துலேனி கதா படத்தில் ரஜினி தனது குடிகார தம்பியாக நடித்ததாக நடிகை ஜெயபிரதா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. பின்னர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவர் தற்போது தனது மகனை வைத்து உயிரே உயிரே படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தனது திரை உலக பயணம் குறித்து கூறுகையில்,
கே. பாலசந்தர் எழுதி, இயக்கிய அந்துலேனி கதா என்ற தெலுங்கு படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானேன். அதில் ரஜினிகாந்த் என்னுடைய குடிகார தம்பியாக நடித்திருந்தார். சலங்கை ஒலி படத்தில் நான் இயல்பாக நடிக்க கமல் ஹாஸன் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். அவர் தான் எனக்கு எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
என்னால் மறக்க முடியாத படம் என்றால் அது நினைத்தாலே இனிக்கும் தான் என்றார்.