Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி, கமல்: கார்த்தியின் ஆதரவு யாருக்கு?
Recommended Video
புதுக்கோட்டை: கமல் ஹாஸன், ரஜினிகாந்த் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தனிக்கட்சி துவங்கி அரசியலுக்கு வருகிறார்கள். அதிலும் ரஜினி தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறார்.
இந்நிலையில் இது குறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரசியல்
விஷால் அரசியல் கட்சி எதுவும் துவங்கவில்லை. அது குறித்து அவர் பேசவும் இல்லை. அவர் தனி மனிதராக தமிழக மக்களுக்கு உதவ விரும்பினார். அதனால் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
புரிந்தது
அரசியலில் உள்ள கஷ்டங்கள் விஷாலுக்கு புரிந்துவிட்டது. அவர் யாருக்கும் பயப்படாமல் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு டெபாசிட் பணம் திரும்பிக் கிடைக்காவிட்டாலும், போட்டியிட முன்வந்ததை பாராட்ட வேண்டும்.
கமல்
ரஜினி, கமல் விஷயத்தில் சில மாதங்கள் பொறுத்திருப்போம். அவசரப்பட வேண்டாம். அவர்கள் தங்களின் திட்டங்களை அறிவிக்கட்டும். அதன் பிறகு யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வோம்.
மக்கள்
ரஜினியும், கமலும் லெஜண்டுகள். அவர்கள் சினிமாவில் நிறைய சம்பாதித்துவிட்டார்கள். அதனால் அவர்கள் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தங்களை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் எங்கும் ஓடிவிட மாட்டார்கள் என்றார் கார்த்தி.