Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து இதைச் செய்ய வேண்டும்! - பிரபல நடிகர்
சென்னை : வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதன்பின் 'ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது இவர் போலீசாக நடித்துள்ள 'யார் இவன்' படம் வெளியாகியிருப்பதை அடுத்து இவர் நாயகனாக நடித்துள்ள 'களத்தூர் கிராமம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கிஷோர் ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியிருக்கிறார். 'ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும்.
ரஜினியும், கமலும் நேரடி அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை' எனக் கூறியிருக்கிறார் கிஷோர். கிஷோர், ரஜினியுடன் 'கபாலி' படத்திலும், கமலுடன் 'தூங்காவனம்' படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.