Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு - உரிய சூழல் அமையும் வரை காத்திருக்க அறிவுரை!
சென்னை: தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளை திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அனைவருடனும் பேசிய ரஜினி விழாவுக்காக உழைத்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
ரசிகர்கள் அனைவரும் தங்கள் பணிகளில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக அரசியலுக்கு வந்து கையைச் சுட்டுக் கொண்ட சிரஞ்சீவி, விஜயகாந்த் உள்ளிட்டோரை சுட்டிக் காட்டிய ரஜினி, நாம் அரசியலில் அடியெடுத்து வைப்பது ஏதோ ஒப்புக்காக இருக்கக் கூடாது. வந்தால் அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு நினைத்ததைச் செய்யும் அளவுக்கு சூழல் அமைய வேண்டும். அதற்கு முன் அவசரப்படக் கூடாது என்றார்.
அரசியலில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை... என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.