Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்
சென்னை: என்னை தன்னுடைய மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர். அவர் மறைவு, என்னையே நான் இழந்ததைப் போல இருக்கிறது, என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரைத் தந்தவர் கே பாலச்சந்தர். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் இரண்டாவது நாயகனாக ரஜினியை அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு ரஜினிகாந்த் என்பவர் இந்திய சினிமாவின் ஆளுமையாக மாறிப் போனது தனி வரலாறு.
பாலச்சந்தர் மீது அளவுக்கு அதிகமான மரியாதை பாசம் வைத்திருந்தார் ரஜினி. எந்த மேடை, நேர்காணல் என்றாலும் பாலச்சந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்ததில்லை ரஜினி.
தனது குருநாதர் உடல்நலம் குன்றியிருந்தபோது நேரில் போய் பார்த்துவிட்டு வந்தார் ரஜினி. மீண்டும் அவர் உடல்நலம் பெற்று வந்துவிடுவார் என நம்பினார் அவர்.
நேற்று பாலச்சந்தர் மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உடனடியாக அவர் வீட்டுக்குப் போய் தனது மரியாதையைச் செலுத்தினார்.
ருத்துவமனையிலிருந்து மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு பாலசந்தரின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார்.
பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது குரு மட்டுமல்ல. எனக்கு தகப்பன் போன்றவர். என்னை அவர் நடிகனாகப் பார்க்கவில்லை. மகனாகப் பார்த்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என்னை நானே இழந்து விட்டதாக உணர வைத்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.
கே.பாலச்சந்தருக்கு ரஜினி, சரத், ராதிகா அஞ்சலி வீடியோ
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!