Don't Miss!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"சூப்பர்ஸ்டார்கிட்ட இருந்து போன் வரும்னு எதிர்பார்க்கவே இல்ல" - நெகிழும் 'பாகமதி' அனுஷ்கா!
சென்னை : நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே அதிகமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் அனுஷ்கா. அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் 'பாகமதி'. இந்தப் படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார் அனுஷ்கா.
இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தமிழிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் ஹீரோயின் வாய்ப்பினை பெற்றார் அனுஷ்கா. அதன்பிறகு அவருக்கு மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அனுஷ்காவை பாராட்டியுள்ளார் ரஜினி.
தற்போது அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகமதி படத்தை ரஜினியும் பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அனுஷ்காவுக்கு போன் செய்து படத்தையும், அவரது நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.
இந்தத் தகவலை வெளியிட்டுள்ள அனுஷ்கா, "ரஜினியிடமிருந்து பாகமதி படத்திற்கு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த வகையில், பாகமதி படத்திற்கு எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தபோதும், ரஜினியின் இந்த பாராட்டை சிறந்த பாராட்டாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.