அம்பரீஷின் உடலுக்கு ரஜினி, ராதிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சிரஞ்சீவி அஞ்சலி
Recommended Video

பெங்களூர்: கன்னட நடிகர் அம்பரீஷின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அம்பரீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறுகிறது.

ரஜினி
கந்தீரவா ஸ்டேடியத்திற்கு வந்த ரஜினிகாந்த் தனது நண்பனின் உடலை பார்த்ததும் கண் கலங்கிவிட்டார். அம்பரீஷின் மனைவி சுமலதா, மகன் அபிஷேக்கிற்கு அவர் ஆறுதல் கூறினார்.

பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் அம்பரீஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

குமாரசாமி
அம்பரீஷின் மரண செய்தி அறிந்த உடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி விக்ரம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். பின்னர் ஸ்டேடியத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தனது நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தார்.

சிவராஜ்குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் ரிபெல் ஸ்டாருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

சுமலதா
முன்னாள் பிரதமர் தேவே கவுடா அம்பரீஷுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

சரத்குமார்
ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.


Click it and Unblock the Notifications











