Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி - ரஞ்சித் ஆடும் அரசியல் ஆடு புலி!
Recommended Video
காலா திரைப்படம் தொடங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அதில் கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத அரசியல் பயணித்து வருகிறது.
ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலா படம் பற்றிய செய்தியும், விவாதங்களும் பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தயாரிப்பாளர் தனுஷ்.
பலவிதத்தில் காலா படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்து, 10.02.2018 இரவு 7 மணிக்கு
ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அறிவித்தார் தனுஷ்.
அறிவிப்புக்கு பின் அனைத்து ஊடகங்கள், பொதுவெளியில் எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை.
காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்துவிட்டது.
ரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் பதிவானது. ரஜினிகாந்த் நடித்த படங்களை இயக்கிய மணிரத்னம், ஷங்கர் இவர்களுக்கு கூட இந்தளவு முக்கியத்துவம் கிடைத்தது இல்லை
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என மூன்று படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் ரஞ்சித்.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்கள் கூட பேசத் தயங்கிய போது, இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலை ரஞ்சித் படங்கள் பேசியதால் ரஞ்சித் கவனம் ஈர்த்திருக்கிறார்
தமிழ் சினிமாவில் ரஜினி என்ற மிகப்பெரிய ஆளுமையைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது, கவனம் ஈர்ப்பது சாதாரணமானது இல்லை.
ரஜினியின் பிரபலத்தை தான் பேச நினைக்கும் அரசியலுக்கு லாவகமாகமாக பயன்படுத்த ரஞ்சித்தால்முடிந்தது. அதனை அறிந்த பின் அடுத்த பட வாய்பையும் வழங்கி ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரஜினியின் அரசியல் சாதூர்யத்தை என்னவென்பது!!