பறவை ரோபோவான ரியாஸ்கான்... 2.ஓ அப்டேட்!
இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ.
முழுப்படமுமே 3டியில் உருவாவதால் ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக எடுத்து வருகிறார்கள் ஷங்கரும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும்.

படத்தில் மெயின் வில்லனாக அக்ஷய் குமார் இருந்தாலும் ஒரு முக்கிய வில்லன் கேரக்டர் ரியாஸ் கானுக்கு.
பாபாவில் ரஜினியிடம் மாட்டுவாரே மந்திரி மகன்...அவரே தான். 2.ஓ படத்தில் ரியாஸ்கான் பறவை ரோபோவாக நடிக்கிறாராம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரோபோ பறவையுடன் பல்லாயிரக்கணக்கான ராட்சத பறவைகள் குழும வேண்டும். அந்த காட்சிக்காக இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகளை வாடகைக்கு எடுத்து வந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
இன்னும் சில தினங்களில் 2.ஓ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படவிருக்கிறது.
அன்றுதான் ரஜினி ரசிகர்களுக்கு உண்மையில் தீபாவளி!


Click it and Unblock the Notifications











