Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
என் பெயரை பயன்படுத்த கஸ்தூரிராஜாவுக்கு அனுமதி இல்லை! - ரஜினி
சென்னை: எந்த இடத்திலும் தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்தார்.
"மே ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி பைனான்சியர் போத்ரா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்த ரஜினி தடை உத்தரவு பெற்றுள்ளார். ஆனால், அவரது பெயரைப் பயன்படுத்தி, இயக்குநர் கஸ்தூரிராஜா என்னிடம் ரூ.65 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
ரஜினியின் சம்பந்தியே அவரது பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, இந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தையும் கேட்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரஜினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், என்னைப் பற்றி படம் தயாரித்த பட நிறுவனத்துக்கு எதிராகத்தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதற்கும், போத்ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது மனு விசாரணைக்கு உகந்தல்ல.
இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு, எனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள எந்த அதிகாரமும், வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.