கொடைக்கானலில் கணவருடன் ரெஸ்ட் எடுக்கும் சௌந்தர்யா ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது தந்தை மற்றும் பாலிவுட் நடிகை தீபிகாவை வைத்து கோச்சடையான் படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் லண்டன், கேரளா, ஹாங் காங் என்று ஓடி, ஓடி உழைத்துள்ளனர்.
தற்போது ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்துள்ள சௌந்தர்யா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் எனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். அங்கு கோல்ப் விளையாடி எனது பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்பொழுது தான் திரும்பி வந்து கோச்சடையானுக்காக ஓட முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications











