Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஏப்ரல் 14-ல் ரஜினியின் கோச்சடையான்..!
ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினி இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஆரம்பத்தில் அனிமேஷன் என்று சொல்லப்பட்டு, பின்னர் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நிஜ நடிகர்களே நடிக்கும் படமாக மாற்றப்பட்டது.
அத்துடன் மறைந்த சாதனை நடிகர்கள் நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் இந்தப் படத்தில் தோன்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் வருகிறது.
ஆரம்பத்தில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றார்கள். ஆனால் மூன்று நாடுகளில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன், எடிட்டிங் பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
இப்போது கிராபிக்ஸ் மற்றும் ஒலிக் கலவை போன்ற பணிகள் முடிந்து எடிட்டிங் நடந்து வருகிறது.
இதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், "இப்போது சென்னை, லண்டன் நகரங்களில் உள்ள நான்கு ஸ்டுடியோக்களில் கோச்சடையான் பணிகள் நடந்து வருகின்றன. பாடல்கள் அனைத்தும் தயார். ஆல்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. முதல் பாதியின் எடிட்டிங் முழுமையடைந்துவிட்டது. இப்போது இரண்டாம் பாதியின் பணிகள் நடக்கின்றன.
டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன. தீபிகா படுகோன் சொந்தக் குரலில் டப் பண்ணுகிறார். ஏப்ரலில் படத்தைத் திரையிட முயன்று வருகிறோம்," என்றார்.
கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான் மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.