Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராணுவ வீரன் ரஜினி - புகையிலை வாய் ஸ்ரீதேவி... மறக்க முடியுமா அந்த ரொமான்ஸை! RajinikanthSridevi
ராணுவ வீரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவியின் பாத்திரம் யாராலும் மறக்க முடியாதது.
தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் எண்பதுகளில் நிலவிய நக்சலைட் பயங்கரவாத சம்பவங்களை மையமாக
வைத்து உருவான படம் ராணுவ வீரன்.
அன்றைக்கு முதல்வராக இருந்த அமரர் எம்ஜிஆர் ஆசியுடன், ஆர்எம் வீரப்பன் தனது சத்யா மூவீஸ்
நிறுவனத்தின் பேனரில் தயாரித்த படம் ராணுவ வீரன். இந்தப் படத்தில் ராணுவ வீரன் ரஜினிக்கு ஜோடியாக
ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
படிக்காத, சண்டை சேவலுக்கு சொந்தக்காரியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். பாவாடை, சட்டையுடன் வாயில்
புகையிலையைக் குதப்பியடி அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களைக் கிறங்கடித்தன. இத்தனைக்கும் இந்தப் படம் நாயகனுக்கு முக்கியத்துவம் தந்த படம். ஸ்ரீதேவியின் பாத்திரம் ஒரு மசாலாதான். ஆனால் அதிலும் அந்தப் பாத்திரமாகவே மாறி, ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி.
ஒரு காட்சியில், ரஜினி ஸ்ரீதேவியைச் சீண்டியபடி பாடும் 'சொன்னால்தானே தெரியும்... என்னைக் கண்ணால் பாரு புரியும்' பாடல் எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காதது.
"கோழியும் இங்கே சேவலும் இங்கே
குடும்பத்தைப் பார் இங்கே
ஜோடிகள் இன்றி பறவைகள் கூட
வாழ்வதுதான் எங்கே
பறவையின் நிலைவேறு
மனிதனின் கதைவேறு...
மனிதர்கள் இனம் போலே
பறவைகள் கடமையை அறியாது..."
கவிஞர் வாலியின் வரிகளுக்கு ரஜினியும் ஸ்ரீதேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருப்பார்கள் இந்தப் பாடலில்.