Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்
3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.
ஒல்லிக் குச்சியாக இருக்கும் அவரிடம் யாரோ தனுஷ் மாதிரி நீங்களும் பெரிய ஹீரோவாகலாம் என்று தூபம் போட்டுள்ளார். உடனே அவருக்கு ஹீரோ ஆசை வந்து சான்ஸ் தேட ஆரம்பித்தார். இந்நிலையில் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு பட நிறுவனம் முன்வந்துள்ளது. கதை விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.
பெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்க நடையாக நடந்து அலுத்துப் போன இயக்குனர்களின் பார்வையும் அனிருத் பக்கம் திரும்பியிருக்கிறது. இது குறித்த தகவல் காத்து வாக்கில் ரஜினியின் காதுகளுக்கு சென்றது. அவர் உடனே அனிருத்தை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.
அவர் அனிருத்திடம் கூறியதாவது,
திரையுலகில் நம் ஆசையை விட சினிமா நம்மை எந்த பாதையில் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். சினிமா உன்னை இசைப் பாதையில் அழைத்துச் செல்கையில் நீ வேறு பாதையில் போக ஆசைப்படுகிறாய். இது உன் எதிர்காலத்தை வீணடித்துவிடும்.
நடிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் மனதை அலைபாயவிடாமல் இசையில் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு இருக்கும் திறமைக்கு நீ பெரிய இசையமைப்பாளர் ஆவாய் என்று கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த அறிவுரை அனிருத்துக்கு பிடிக்காவிட்டாலும் அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளாராம். அதனால் நடிக்கலாமா, இல்லை இசையோடு நின்று கொள்ளலாமா என்று அனிருத் தீவிர யோசனையில் உள்ளாராம்.