twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, ரஜினி காந்த் சார்பில் முப்பது லட்சம் செலவில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றுரஜினி காந்த் ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா -கூ-றி-னார்.

    ரஜினி காந்த் ரசிகர்மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா,தேனி அருகே உள்ள உத்தமபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    விழாவில் பேசிய ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா ரஜினி காந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் 1997-ம் ஆண்டு முதல்இதுவரை 60 ஜோடிகளுக்கு மக்களின் ஆதரவுடன் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் 20 ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கப்படும். இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    அதே போல் ரஜினி காந்த் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள்வழங்கப்பட்டுவருகிறது.

    அதன்படி , கடந்த ஆண்டு 1999 தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாண்டிச்சேரிக்கு ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 30லட்சரூபாய் செலவில் அரசு பள்ளியில் 1 முதல் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம், பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட-ன.

    இந்த ஆண்டில் ப்ளஸ் - 1 , ப்ளஸ் - 2 படிக்கும் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பெஞ்ச், டெஸ்க்குகள் வழங்கப்படும். மேலும், சிலபள்ளிக்களுக்கு குடிநீர் தொட்டிவசதி, போரிங் பைப், பம்பு செட் ஆகிய வசதிகளும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக செய்து கொடுக்கப்படும். மொத்தம்முப்பது லட்சரூபாய் செலவில் இவைகள் செய்யப்படும்.

    ரஜினிகாந்த் , தனது பெயருக்கும், புகழுக்கும், செல்வத்துக்கும் முழுகாரணமாக திகழும் தமிழக மக்களுக்காக, தனது வருமானத்தில் ஒரு பகுதியைமக்களின் நலனுக்கு அளிக்கவேண்டியது தனது கடமை என்று கருதி நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். இவ்வாறு சத்யநாராயணா பேசினார்.

    Read more about: actor charity cinema rajnikanth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X