twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "சிவாஜி" படப் பூஜை ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படபூஜை வருகிற டிசம்பர் மாதம் முதல் தேதி நடக்கிறது.சிவாஜி புதுப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார். படத்தில்கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். வில்லனாக நடிகர் பிராஷ்ராஜ் நடிக்கிறார்.படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. டைரக்டர் ஷங்கர் கடந்த சில மாதங்களாகதொடர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.தற்போது சிவாஜி படத்தின் கதை முழுவடிவம் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் கதை வசனங்களை சுஜாதாஎழுதுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.முதலில் டிசம்பர் 12ம் தேதி பூஜை போடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அன்று ரஜினியின் பிறந்தநாள்என்பதாலும் அவர் வழக்கம் போல் வெளியூர் சென்றுவிடுவார் என்பதாலும் டிசம்பர் 1ம் தேதி பூஜை போடதிட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாட்டில் ஏவிஎம் நிறுனத்தார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.படத்தின் பூஜை முடிந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கயிருக்கிறது. முதல் கட்டமாக உள்ளூரில் நடத்திவிட்டு பிறகு வெளியூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக தோட்டா தரணி ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்கத்தை அமைத்துள்ளார்.சிவாஜி படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. சிவாஜி படத்தை அடுத்த தீபாவளிக்கு வெள்ளித்திரையில் பார்க்கலாம்.

    By Staff
    |

    ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படபூஜை வருகிற டிசம்பர் மாதம் முதல் தேதி நடக்கிறது.

    சிவாஜி புதுப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார். படத்தில்கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். வில்லனாக நடிகர் பிராஷ்ராஜ் நடிக்கிறார்.

    படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. டைரக்டர் ஷங்கர் கடந்த சில மாதங்களாகதொடர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    தற்போது சிவாஜி படத்தின் கதை முழுவடிவம் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் கதை வசனங்களை சுஜாதாஎழுதுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    முதலில் டிசம்பர் 12ம் தேதி பூஜை போடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அன்று ரஜினியின் பிறந்தநாள்என்பதாலும் அவர் வழக்கம் போல் வெளியூர் சென்றுவிடுவார் என்பதாலும் டிசம்பர் 1ம் தேதி பூஜை போடதிட்டமிடப்பட்டுள்ளது.


    இதற்கான ஏற்பாட்டில் ஏவிஎம் நிறுனத்தார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    படத்தின் பூஜை முடிந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கயிருக்கிறது. முதல் கட்டமாக உள்ளூரில் நடத்திவிட்டு பிறகு வெளியூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த படத்திற்காக தோட்டா தரணி ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்கத்தை அமைத்துள்ளார்.

    சிவாஜி படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

    சிவாஜி படத்தை அடுத்த தீபாவளிக்கு வெள்ளித்திரையில் பார்க்கலாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X