Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராணா படம் குறித்து மீண்டும் பேசிய ரஜினி... இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்ன சொன்னார் தெரியுமா!
சென்னை : தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்
இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த இவர் இப்பொழுது நடிகராகவும் கலக்கி கொண்டுள்ளார்
கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்த ராணா திரைப்படம் டிராப் ஆகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரஜினி ராணா கதையை திரும்ப சொல்ல சொல்லி கேட்டு பிரமித்துப் போனார் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.
அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை.. அந்த நடிகர் படத்துல நான் நடிக்கவே இல்லை.. மாளவிகா மோகனன் அதிரடி!
எண்ணற்ற வெள்ளி விழா படங்களை
நாட்டாமை,நட்புக்காக,முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என எண்ணற்ற வெள்ளி விழாப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி கமல் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவர் ரஜினியுடன் இணைந்து முத்து, படையப்பா, லிங்கா உள்ளிட்ட படங்களில் படங்களை இயக்கியுள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் சரித்திர பின்னணியில்
இதில் முத்து மற்றும் படையப்பா இன்று வரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக சரித்திரம் படைத்துள்ளது. ரஜினி கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் மேலும் சில படங்கள் உருவாக இருந்து டிராப் ஆனது. அதில் முக்கிய திரைப்படம் ராணா . அதிநவீன தொழில்நுட்பத்துடன் சரித்திர பின்னணியில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்த படம் பூஜை எல்லாம் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
ராணா மிக பிரம்மாண்டமாக
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக இருந்த இந்த படம் திடீரென ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நின்று போனது.. பல வருடங்கள் ஆகியும் ராணா திரைப்படம் இன்று வரை உருவாகவில்லை. இதற்கிடையில் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் ஜக்குபாய் என்ற படமும் உருவாகயிருந்தது.
மீண்டும் ராணா கதையைக் கேட்டார்
கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்க தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் சுவாரசிய தகவல் ஒன்றை அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து பேசியுள்ளார். அப்போது திடீரென ராணா படம் குறித்து பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் அந்த படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா எனக் கேட்டுள்ளார். கதையை கேட்டபின் ஆச்சரியமடைந்த ரஜினிகாந்த் இந்த படம் பண்ணி இருந்தா சூப்பரா இருந்திருக்கும் என நெகிழ்ந்து கூறினாராம்.