Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூப்பர்.. எனக்கும் ஒரு கதை யோசிங்க.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியது இதுதான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.
எக்ஸலென்ட் என வாழ்த்திய ரஜினி.. லீக்கான ஆடியோ.. கவலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!
பெயரை குறிப்பிடாமல்
இந்தப் படத்தை தற்போது பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் பெரியசாமி, ரஜினிக்காந்தின் பெயரை கூட குறிப்பிடாமல் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
சூப்பர்.. எக்ஸலென்ட்..
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் பேசிய தொலை பேசி ஆடியோ லீக்காகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, உங்க படத்த நேத்துதான் பார்த்தேன்.. சூப்பர்.. எக்ஸலென்ட்.. நான் திரும்பவும் பார்க்கிறேன்.. வாழ்த்துகள்..
எனக்கும் யோசியுங்கள்
சாரி இவ்ளோ லேட்டா உங்க படத்தை பார்க்குறதுக்கு..
உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. எனக்கும் ஏதாவது யோசியுங்கள் என்று ரஜினிகாந்த் கூற.. எதிர்முனையில் அய்யோ சார் என தேசிங்கு பெரியசாமி பதறுகிறார்.
சீரியஸ்லி யோசிங்க
பின்னர் சீரியஸ்லி எனக்காக யோசிங்க என கூறுகிறார் ரஜினிகாந்த்.. மீண்டும் படம் நன்றாக உள்ளது என்று கூறும் ரஜினிகாந்த் கடவுளின் ஆசிர்வாதம் என முடிக்கிறார். இந்த ஆடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.