Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்… வைரலாகும் வீடியோ !
சென்னை : ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
Recommended Video
சௌந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் தனது மகன் வேத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார்
இவர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த வீடியோ வைரலாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5... நீங்களும் கலந்துக்குறீங்களா... சொல்லக்கூடாது சஸ்பென்ஸ் என்ற பிரபல நடிகர் !
சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வைரலான போஸ்டர்
இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பைக்கை ஓட்டிக்கொண்டு கையில் அரிவாளை ரஜினி பிடித்திருப்பது போன்ற காட்சி போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்க்கும் போது அண்ணாத்த ஒரு பக்கா ஆக்ஷன் கதை என்பது போல் தோன்றும். ஆனால், அதில் உண்மையில்லை. படத்தில் ஆக்ஷன் படம் இல்லையாம், அழுத்தமான அண்ணன் தங்கை சென்டிமென்ட் படமாம். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாக உள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
பொன்னியின் செல்வன் வெப் தொடர்
சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை வெப் சிரீஸாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இத்தொடரை இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு புதுவெள்ளம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சௌந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.