Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு நேற்று நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பொன்னியின் செல்வன் மேடையில் பேசிய ரஜினி, நடிகர் விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
மரண மாஸ்தான் போங்க..ஒரே நேரத்தில் 5 மொழிகளில்..5 ஸ்டார்ஸ் வெளியிடும் பொன்னியின் செல்வன் டிரைலர்!
பிரம்மாண்டமாக வெளியான ட்ரெய்லர்
தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற ரஜினி, கமல்
பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர், ரஜினி, கமல் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னதாக பொன்னியின் செல்வன் மேடையில் ஏறிய ரஜினி, கமல் இருவரும் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விஜயகாந்த் பற்றி பேசிய ரஜினிகாந்த்
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலரும் நினைத்தது உண்டு. ஆனால், அப்போதெல்லாம் சாத்தியப்படாத பொன்னியின் செல்வன், இப்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கியமான பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்திருக்கிறேன் என ரஜினி மனம் திறந்துள்ளார்.
ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்
பொன்னியின் செல்வன் நாவலை கொஞ்சம் தாமதமாக தான் படித்ததாகவும், அதில் வரும் ஆதித்ய கரிகாலன் பாத்திரம் எனக்கு பிடிக்கும் எனவும் ரஜினி பேசினார். மேலும், தொன்னூறுகளில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருந்தால், அதில் வரும் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன் என மனம் திறந்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள், பயங்கரமாக ஆரவாரம் செய்தனர். தற்போது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில், ஆதித்ய கரிகலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்