Rajini: ரஜினி ரசிகர்கள் ஒரு ஓட்டு கூட TVKவுக்கு கிடைக்காது.. ஆதவ் அர்ஜுனாவை விளாசும் ரஜினி ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசினார். அதாவது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்க்குப் பிறகு பெரிய தலைவராக உருவாகும் வாய்ப்பு ரஜினிகாந்திற்கு இருந்தது. ஆனால் அவரை திமுக மிரட்டி, அரசியலில் இருந்து வெளியேற்றி விட்டது. ஆனால் விஜய்யை யாராலும் மிரட்ட முடியாது, விஜய் மிகவும் மன வலிமை கொண்டவர் என்று பேசினார்.
இதில் ரஜினியை திமுக மிரட்டியது என்று தெரிவித்த கருத்து ரஜினி ரசிகர்களை சூடாக்கி உள்ளது. இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் தொடங்கி பல இணையதள வாசிகளும் காட்டமாக ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து வருகிறார்கள்.

ரஜினி ரசிகர் ஒருவர், " ஆதவ் அர்ஜுனா நீங்கள் உங்கள் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். சூப்பர் ஸ்டாரை யாராவது மிரட்ட முடியுமா? தேவையில்லாமல் பேசி விட்டீர்கள். இனி ரஜினி ரசிகர்கள் ஒருவரின் ஓட்டு கூட தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்காது" என்று பேசி உள்ளார்.
வரலாறு தெரியல: மேலும் சில ரசிகர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் என அவர்கள் மேடையில் இருக்கும்போதே அவர்களையும் அவர்களின் கட்சியினரையும் விமர்சித்து பேசிய வீடியோக்களைப் பகிர்ந்து ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. தலைவர் ரஜினிகாந்த் சொன்ன மாதிரி, "எங்க ஜென்ம விரோதியை கூட மன்னிச்சிடுவோம், ஆனா கூடவே இருந்து குழி பறிச்ச துரோகியை மன்னிக்கவே மாட்டோம். அதுபோல தவெகவே நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

பயமா இருக்கா?: மேலும் சிலரோ ரஜினியின் ஒரு எக்ஸ்குளுசிவ் புகைப்படத்தைப் பகிர்ந்து என்ன குழந்தை பயமா இருக்கா? என்றும் வருத்தம் தெரிவித்து ஆதவ் அர்ஜுனா வீடியோவோ கடிதமோ வெளியிடுவார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மொத்தத்தில் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் அரசியல் களத்தில் இது தொடர்பான பேச்சுத்தான் அதிகம் உலா வருகிறது.


Click it and Unblock the Notifications











