Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்!
சென்னை: நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.
Recommended Video
தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை, சென்னை வரும்படி நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அழைத்திருந்தார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவர், அவர்களை அழைத்திருந்தார்.
அதன்படி அவர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து ரஜினிகாந்த் வீடு மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் அருகே இன்று காலை முதலே, ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். பின்னர் காலை 9.45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்தை அவர் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவர், ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
பின்னர் அவர், அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிப்பார் என்று அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.