Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பாட்டு பிடிச்சிருக்கா.. உங்கள் மாமனார்தான் காரணம்.. மேடையில் தனுஷை கிண்டலடித்த இளையராஜா!
சென்னை : இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்த இசை நிகழ்ச்சிக்காக சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, முழுவீச்சில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஆமோகமாக விற்றுத்தீர்ந்தது.
எங்குபார்த்தாலும் தலைகளாக காணப்படும் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் ராஜாவின் இசை வர்ணஜாலம் படைத்து வருகிறது.
களைகட்டிய இசைவிழா
இசைநிகழ்ச்சியின் முதல் பாடலாக ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடலுடன் ராக் வித் ராஜா நிகழ்ச்சி தொடங்கியது. மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து, இளையராஜாவின் என்றும் பேவரைட் பாடலான இளமை இதோ இதோ பாடலை பாடி அசத்தினர். இந்த பாடலை மனோ பாடத் தொடங்கியதும், அங்கிருந்த ரசிகர்கள் ஆட்டம் போடத்தொடங்கினர்.
ரசிகர்கள் ஆட்டம் போட்டனர்
பாடகர் கார்த்திக் ராக்கு முத்து ராக்கு பாடலை கொரோனா பாடலாக வரிகளை மாற்றிப்பாடி கைத்தட்டலை பெற்றார். கொரோனா பெருந்தொற்று பெரிய அளவிலான கூட்டத்திற்கு வாய்ப்பளிக்காத நிலையில், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இளையராஜா மிகப்பெரிய பொதுவெளி இசை நிகழ்ச்சியில் கலக்கி வருவதை இளையராஜாவின் ரசிகர் ரசித்து வருகின்றனர்.
என்னுள்ளே என்னுள்ளே
வள்ளி திரைப்படத்தில் வரும் மொல்லோடி பாடலான என்னுள்ளே என்னுள்ளே பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். அதுவரை ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு அப்படியே இருக்கையில் மெய்மறந்து லாபித்து போனார்கள். வள்ளி படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடலை வாலியின் வரிகளில் சொர்ணலதா பாடி இருந்தார்.
உங்க மாமனார்தான் காரணம்
இந்த பாடல் முடிந்தவுடன், தனுசை எழுந்திருக்கும் படி கூறிய இளையராஜா, உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல, இந்த பாடலின் மகத்தான வெற்றிக்கு, உங்க மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்ட தனுஷ் மௌனமாக சிரித்துவிட்டு, தலை ஆட்டியபடி அமைதியாய அமர்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு தனுஷ் தனது இரு மகன்களை அழைத்து வந்திருந்தார்.