Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினி - சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... 'எந்திரன்' போல வசூல் குவிக்குமா?
Recommended Video
சென்னை : ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது.
|
கார்த்திக் சுப்புராஜ்
2012-ம் ஆண்டு வெளிவந்த 'பீட்சா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா' படத்தின் மூலமும் பெரிதும் பேசப்பட்டார். அடுத்து, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க 'இறைவி' படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு சரியான படமாக அமையவில்லை.
மெர்க்குரி
அடுத்து பிரபுதேவா நடிக்கும் மெர்குரி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற இவர் உள்பட சில இயக்குநர்களிடையே கடும் போட்டி இருந்து வந்தது.
ரஜினி படம்
இந்நிலையில், ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்பு வெளியானது.
சன் பிக்சர்ஸ்
ஏற்கெனவே சன் பிக்சர்ஸ், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. அடுத்தடுத்த படங்களின் மூலம் மீண்டும் தீவிர சினிமா தயாரிப்பு பணிகளில் இறங்கியிருக்கிறார் கலாநிதி மாறன்.
எந்திரன் படத்திற்குப் பிறகு
ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரஜினியும் மீண்டும் இணையும் படம் இது. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, 2.0 படங்கள் வெளிவராத நிலையில் அதற்குள் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிறி அடிக்குமா வசூல்?
எந்திரன் வெளிவந்தபோது தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபிஸில் பல வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை 'பாகுபலி 2' தான் தகர்த்தது. மீண்டும் அதைப் போன்றதொரு சாதனையை இந்தப் படம் படைக்குமா?
அப்போ அரசியல்?
ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கவிருக்கும் நிலையில் இந்தப் புதிய பட அறிவிப்பு திரையுலகத்திலும், அரசியல் களத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால், இந்தப் படம் முடியும் வரை அரசியலுக்கு வரமாட்டாரா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.