Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலா படப்பிடிப்புக்கு இடையே மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்த ரஜினி
மும்பை: லெஜண்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை சென்றார். மும்பையில் தாராவி, அந்தேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். மீண்டும் 24ம் தேதி மும்பை சென்று அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து அம்ருதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
லெஜண்ட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கிரேட் மீட்டிங். சமூக விவகாரங்கள், தீர்வுகள் குறித்து அவர் விவாதித்தார் என தெரிவித்துள்ளார்.
Gr8 meeting wth legend @superstarrajini .The humanitarian PadmaVibhushan discusd prevalent social concerns & solutns pic.twitter.com/4bIG5flQvN
— AMRUTA FADNAVIS (@fadnavis_amruta) June 7, 2017