Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ் உட்பட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
தீபிகா படுகோனே வாட்ஸ்அப் தகவல்கள் எப்படி கசிந்தது? வாய்ப்பே இல்லை என மறுக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்!
விரைவில் ஷூட்டிங்
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊர் தலைவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சில வலுவான வசனங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
பஞ்ச் டயலாக்குகள்
தான் சார்ந்த காட்சிகளுக்காக ரஜினிகாந்த் டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பில் சேரலாம் என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் அவருக்காக ஒரு சில பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளாராம்.
அட்டகாசம்
தனக்காக எழுதிய பஞ்ச் டயலாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் தெரிவித்ததாகவும் அதனை கேட்ட சிறுத்தை சிவா அட்டகாசமாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக்குகள் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையல்ல
மேலும் இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான பஞ்ச் வசனங்களை எழுதுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே 'பாபா' உள்ளிட்ட சில படங்களில் அவருக்கான சில பஞ்ச் டயலாக்குகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.