Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ் உட்பட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
தீபிகா படுகோனே வாட்ஸ்அப் தகவல்கள் எப்படி கசிந்தது? வாய்ப்பே இல்லை என மறுக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்!
விரைவில் ஷூட்டிங்
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊர் தலைவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சில வலுவான வசனங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
பஞ்ச் டயலாக்குகள்
தான் சார்ந்த காட்சிகளுக்காக ரஜினிகாந்த் டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பில் சேரலாம் என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் அவருக்காக ஒரு சில பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளாராம்.
அட்டகாசம்
தனக்காக எழுதிய பஞ்ச் டயலாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் தெரிவித்ததாகவும் அதனை கேட்ட சிறுத்தை சிவா அட்டகாசமாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக்குகள் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையல்ல
மேலும் இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான பஞ்ச் வசனங்களை எழுதுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே 'பாபா' உள்ளிட்ட சில படங்களில் அவருக்கான சில பஞ்ச் டயலாக்குகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.