Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கடலூரில் தொடங்கியது ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அடுத்த கட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் மூலம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தேவையான நிவாரணப் பொருள்களை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் விநியோகித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகள், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றை விநியோகித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்குவதை ரஜினிகாந்தின் நண்பரும் ரசிகர் மன்றங்களின் தலைமைப் பொறுப்பாளருமான சுதாகர் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த நிவாரணப் பொருள்களை வழங்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.