Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை! - ரஜினிகாந்த்
Recommended Video
கமல் ஹாஸன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
10 நாட்கள் இமயமலை ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். தனது போயஸ் தோட்ட இல்லத்தை அடைந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவது குறித்துக் கேட்கப்பட்டபோது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நான் எப்போதோ சொல்லி விட்டேன். தமிழக அரசு இதுகுறித்து உறுதியாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்," என்றார்.
பல விஷயங்களில் நீங்கள் மௌனம் காப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை," என்றார் ரஜினிகாந்த்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லையே என முன்பு கமல் ஹாஸனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கமல், 'அவர் (ரஜினி) பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே இந்த ஒரு விஷயம் பற்றி மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல," என்றார்.