Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள்: ரஜினி வேதனை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடப்பதை பார்த்து பிற மாநில மக்கள் சிரிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் இனிப்பு வழங்கி அதை கொண்டாடி வருகிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது,
ஜனநாயகம்
அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சுங்க. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜனநாயகம் சீர் கெட்டுப் போச்சு. கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் மக்களை தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு
இந்த நேரத்தில் நான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், என்னை வாழவைத்த தமிழ்நாடு மக்களை வாழ வைக்க நல்ல முடிவை எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும்.
மாற்றம்
சிஸ்டமை மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்தாச்சு. ஜனநாயகப் போரில் நம் படை இருக்கும். ஒரு கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பது சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். கடலில் முத்து எடுப்பது போன்று ஆகும். ஆண்டவனின் அருள், மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.
கொள்ளை
ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் கட்சிக்காரங்க மக்களை பல விதத்தில் கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மக்களிடமே கொள்ளையடிக்கிறார்கள். இதை நாம் மாற்ற வேண்டும். தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசைபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றார் ரஜினிகாந்த்.