twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனை பாராட்டிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன ஜெயம் ரவி.. என்ன சொன்னாரு தெரியுமா?

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு இன்னமும் ரஜினிகாந்த் எந்தவொரு வாழ்த்தும் சொல்லவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜெயம் ரவியின் இந்த ட்வீட் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

    முதல் பாதி முழுவதும் ஜெயம் ரவி வரவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    அந்த அரியணையை ஐஸ்வர்யா ராய் பார்க்கும் காட்சி.. பொன்னியின் செல்வனை சிலாகித்த சிவகார்த்திகேயன்! அந்த அரியணையை ஐஸ்வர்யா ராய் பார்க்கும் காட்சி.. பொன்னியின் செல்வனை சிலாகித்த சிவகார்த்திகேயன்!

    அருள்மொழி வர்மனாக

    அருள்மொழி வர்மனாக

    பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். டைட்டில் நாயகனே இவர் தான் என்றாலும், படத்தில் இண்டர்வெலுக்கு பிறகு தான் இவரது காட்சிகள் கதையில் வருவதை போலவே வருகின்றன. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதும் ஜெயம் ரவியின் பங்கு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

     பாராட்டிய பாட்டி

    பாராட்டிய பாட்டி

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜெயம் ரவியின் நடிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். கதையில் படித்த பொன்னியின் செல்வன் அப்படியே திரையில் வந்து விட்டாரே என ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்தும் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது.

    தேங்க்யூ தலைவா

    தேங்க்யூ தலைவா

    நடிகர் ஜெயம் ரவிக்கு போன் செய்து பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த் வாழ்த்தி பேசிய அந்த ஒரு நிமிடம் தனது நாளை மேலும் சிறப்பாக்கி விட்டது என்றும் அது என் கரியருக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், தேங்க்யூ தலைவா குழந்தையை போல ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு நீங்கள் என்னையும் நான் நடித்த படத்தையும் பாராட்டியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    பொன்னியின் செல்வனை குறிப்பிடல

    பொன்னியின் செல்வனை குறிப்பிடல

    ஆனால், ஜெயம் ரவி குறிப்பாக தனது ட்வீட்டில் எங்கேயும் பொன்னியின் செல்வன் என்கிற வார்த்தையே வராமல் இப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கும் நிலையில், பொன்னியின் செல்வனை பார்த்து விட்டுத் தான் ரஜினி பாராட்டினாரா? ஏன் எங்கேயும் பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்கையோ, அந்த படத்தின் டைட்டிலையோ குறிப்பிடவில்லை என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் தானே அதை பற்றித் தான் அவர் சொல்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    English summary
    Rajinikanth speaks via phone call to Jayam Ravi and praises Ponniyin Selvan and Jayam Ravi's Arulmozhi Varman role. Actor Jayam Ravi now tweeted about this in his Twitter page and expresses his joy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X